7 முறை பார்முலா சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் ஷூமேக்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று ஆல்ப்ஸ் மலையில் பனிச்ச றுக்கு விளையாட்டின் போது படு காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு ஷூமேக்கர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், ஷூமேக்கரின் அலுவலகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப் பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் 2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டது. அதோடு அவ்வளவுதான் அவர் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண் டின் டிசம்பர் 29-ஆம் தேதியுடன் 10 வருடம் ஆகியும் ஷூமேக்கர் உடல் நிலை குறித்து எவ்வித அறிக்கையை யும் அவர் குடும்பத்தினர் மற்றும் அவ ருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்து வமனை வெளியிடாமல் இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.